தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.3 ஆக பதிவு

இமாசல பிரதேசத்தில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சிம்லா,

இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் இன்று மதியம் 12.31 மணியளவில் லேசான அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகி உள்ளது.

இதில் ஏற்பட்ட பொருட்சேதம் அல்லது உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

இதுபற்றி சிம்லா நகர வானிலை மைய இயக்குனர் மன்மோகன் சிங் கூறும்பொழுது, இந்நிலநடுக்கம் சம்பா மாவட்டத்தின் வடகிழக்கே 5 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது