தேசிய செய்திகள்

காஷ்மீரில் காவல் துறை மீது துப்பாக்கி சூடு; பதிலடியில் தீவிரவாதி பலி

காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் மீது நடந்த துப்பாக்கி சூடுக்கு பதிலடியாக தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் அச்சாபல் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றிரவு அவர்கள் மீது தீவிரவாதிகள் சிலர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசாரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். அவனிடம் இருந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தீவிரவாதியின் அடையாளம் மற்றும் எந்த குழுவை சேர்ந்தவன் ஆகியவை பற்றி போலீசார் உறுதியான தகவலை வெளியிடவில்லை. இந்த துப்பாக்கி சூட்டில் போலீசார் ஒருவரும் காயமடைந்து உள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் நலமுடன் உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு