Image Courtesy : @narendramodi 
தேசிய செய்திகள்

பதவியேற்பு விழாவை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்தில் மோடி மரியாதை

பதவியேற்பு விழாவை முன்னிட்டு தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் மோடி மரியாதை செலுத்தினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தியாவின் பிரதமராக 3-வது முறை மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7.15 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் பதவியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் மோடி மரியாதை செலுத்தினார். இது குறித்து மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் நமது தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். அவர்களின் அசைக்க முடியாத தைரியமும், தன்னலமற்ற சேவையும், அவர்கள் போராடிய மதிப்புகளை நிலைநிறுத்துவதற்காக நம்மை ஊக்குவிக்கிறது. மேலும் அவர்கள் கனவு கண்ட வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்கிட அவர்களின் தியாகம் நம்மை ஊக்குவிக்கிறது."

இவ்வாறு மோடி பதிவிட்டுள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்