தேசிய செய்திகள்

தீவிரவாத தாக்குதல், ஊழல் இல்லை என்பதே மோடியின் முக்கிய சாதனை - நிர்மலா சீதாராமன் கூறுகிறார்

தீவிரவாத தாக்குதல், ஊழல் இல்லை என்பதே மோடியின் முக்கிய சாதனை என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

அனைத்து பா.ஜனதா நிர்வாகிகளும் 2 முக்கியமான சாதனைகளை பிரசாரம் செய்ய வேண்டும். 2014-ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் எதுவும் நடை பெறவில்லை. நாடு 5 ஆண்டுகளாக அமைதியாக உள்ளதை மக்களுக்கு நினைவு படுத்த வேண்டும். எல்லையில் கூட எதிரி படைகள் நுழைய முயல்வது ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டு வருகிறது.

அதே அளவுக்கு முக்கியத்துவம் உள்ள மற்றொரு பிரச்சினை கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் என்பதே இல்லை. ஏன், ஊழல் தொடர்பான ரகசிய பேச்சு கூட பிரதமர் மோடி தலைமையிலான அரசில் இல்லை. எனவே சாதாரண மனிதன் அமைதியாகவும், ஊழலில் இருந்து தப்பியும் வாழ முடிகிறது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை