தேசிய செய்திகள்

கேரளாவில் ரெயில்வே மேம்பாலம் அருகே மீண்டும் வெடிபொருட்கள் கண்டெடுப்பு

கேரளாவில் குட்டிபுரம் ரெயில்வே மேம்பாலம் அருகே நீருக்குள் இருந்து துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.#latesttamilnews

தினத்தந்தி

மலப்புரம்,

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் பரதபுழா ஆற்றின் பாலத்திற்கு அடியில் கடந்த ஜனவரி 5ந்தேதி 5 கண்ணி வெடிகள், 2 உலோக பொருட்கள் மற்றும் 6 கோணி பைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் மலப்புரத்தில் குட்டிபுரம் ரெயில்வே மேம்பாலம் அருகே நீருக்குள் இருந்து அதிக அளவிலான துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் இன்று கைப்பற்றப்பட்டன.

அவற்றில் 7.62 மி.மீட்டர் அளவுள்ள 400 துப்பாக்கி குண்டுகள், 6 பல்ஸ் ஜெனரேட்டர்கள், 2 டியூப் லாஞ்சர்கள் உள்ளிட்டவை சில கோணி பைகளில் இருந்துள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கும்பல் பற்றி விசாரணை முடிவில் தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர்.

#latesttamilnews

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்