தேசிய செய்திகள்

மஞ்சள் விவசாயிகள் 250-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் - நிஜாமாபாத் தொகுதியில் நூதன போராட்டம்

நிஜாமாபாத் தொகுதியில், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி மஞ்சள் விவசாயிகள் 250-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில முதல்- மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர் ராவின் மகள் கவிதா நிஜாமாபாத் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். நிஜாமாபாத்தில் மஞ்சள் விவசாயிகள் அதிகமானோர் உள்ளனர். அவர்கள் ஏற்கனவே மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும், நிஜாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திவந்தனர். ஆனாலும் இன்னும் கோரிக்கை நிறைவேறவில்லை.

எனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி நிஜாமாபாத் தொகுதியில் 250-க்கும் மேற்பட்ட மஞ்சள் விவசாயிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் மட்டுமே 245 விவசாயிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் ஏற்கனவே நரேந்திரமோடி, ராகுல் காந்தி ஆகியோரை எதிர்த்து ஆயிரம் பேர் மனு தாக்கல் செய்வோம் என்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்