கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மத்தியபிரதேசத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் 2 ஆயிரம் பன்றிகள் சாவு

மத்தியபிரதேசத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் 2 ஆயிரம் பன்றிகள் இறந்துள்ளன.

தினத்தந்தி

போபால்,

மத்தியபிரதேசத்தின் ரேவா நகரில் 2 வாரங்களுக்கு முன் பன்றிகள் சாகத் தொடங்கின. அதையடுத்து, அவற்றின் மாதிரிகளை போபாலில் உள்ள அதிக பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்துக்கு கால்நடைத்துறை அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.

அதில் அந்த பன்றிகளை ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதித்திருப்பது உறுதியானது. இந்த நகரில் 2 வாரங்களுக்கு உள்ளாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பன்றிகள் இந்த நோயால் இறந்துள்ளன. அவற்றின் உடல்களை நகராட்சி அதிகாரிகள் அழித்தனர்.மேலும், பன்றிகளை எடுத்துச்செல்வதற்கும், அவற்றையும், அவற்றின் இறைச்சியையும் விற்பனை செய்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து