தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 1,500-க்கு மேற்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன - முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்

பிரதமரின் முயற்சிகளால் நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சமூகநல கூடத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கொரோனா முதலாவது அலை தாக்கியபோது, நம்மிடம் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஆனால், தற்போது வென்டிலேட்டர், ஆக்சிஜன், மருந்துகள், என்-95 ரக முககவசங்கள் என எல்லாவற்றிலும் இந்தியா தன்னிறைவுடன் உள்ளது.

பிரதமரின் வேண்டுகோள் மற்றும் முயற்சிகளால் நாடு முழுவதும் 1,500-க்கு மேற்பட்ட மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்