தேசிய செய்திகள்

மும்பை: தாராவியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

மும்பை தாராவியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 13 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

மும்பை,

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 6,427 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று ஒரே நாளில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஒருவர் இன்று அங்கு உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்