தேசிய செய்திகள்

மும்பை: ஒரு மணிநேரம் மின் துண்டிப்பு; ரெயில் சேவை பாதிப்பு

மராட்டியத்தின் மும்பை நகரில் ஒரு மணிநேரம் மின் துண்டிப்பு ஏற்பட்டு ரெயில் சேவை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் மும்பை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு முலுந்த்-திராம்பே மின் வழித்தடத்தின் வழியே மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின் பரிமாற்ற வழித்தடத்தில் இன்று திடீரென பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், இன்று காலை 9.42 மணியளவில் அந்தேரி மற்றும் சர்ச்கேட் பகுதிகளுக்கு இடையே மின் வினியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் உள்ளூர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது என மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

எனினும், இன்று காலை 10.53 மணியளவில் மின் வினியோகம் மீண்டும் சீரானது. இதனால் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது என மும்பை பெருநகர மின்சார வினியோகம் மற்றும் போக்குவரத்து (பெஸ்ட்) துறை தெரிவித்து உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு