மும்பை அருகே வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. மும்பை - சோலாப்பூர் வந்தே பாரத் ரயில் புனே ரயில் நிலையம் அருகே சென்றபோது 4-வது பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகி கீழே இறங்கியது.
இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். எனினும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தடம் புரண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை சீர் செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.