தேசிய செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கலபுரகி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கலபுரகி:

கலபுரகி டவுன் பிரம்மபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சிரஞ்ஜீவி (வயது 29). தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 5 பேர் வந்தனர். அவர்கள் திடீரென பயங்கர ஆயுதங்களால் சிரஞ்ஜீவியை தாக்கினர். மேலும், கத்தியால் அவரது வயிற்றில் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சிரஞ்ஜீவி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்த புகாரின்பேரில் பிரம்மபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுநகர் பகுதியை சேர்ந்த ரகுநாத், அவரது மகன் காசிநாத், விஸ்வநாத் உள்பட 5 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கலபுரகி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. மேலும் போலீஸ் தரப்பில் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்தது உறுதியானதால், காசிநாத் மற்றும் ஜெயா ஆகிய 2 பேருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை