பாட்னா,
பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் மாநில அரசு உதவி பெறும் சிறுமிகள் பாதுகாப்பு இல்லம் ஒன்று செயல்பட்டு வந்தது . இங்கு 4 வயது முதல் 18 வயது வரையுள்ள பேச்சு குறைபாடு கொண்ட 44 சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்த சிறுமிகளில் பலரை இல்லத்தின் உரிமையாளரும், பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக மும்பையைச் சேர்ந்த டாடா சமூக அறிவியல் நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய தணிக்கையின் போது அறிக்கையாக வெளியிட்டது.
பீகார் சமூக நலத்துறை சார்பில் மும்பையின் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் (TISS) நடத்திய பாதுகாப்பு இல்லத்தில் ஆய்வை அடிப்படையாகக் கொண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தபோது இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
இது தொடர்பாக பீகார் மாநில சமூக நலத்துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 44 சிறுமிகளில் 42 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக 29 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது, உறுதிப்படுத்தப்பட்டது. இரண்டாகம் கட்ட பரிசோத்னையில் பாதுகாப்பு இல்லத்தில் காமுகர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்து உள்ளது. இது மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. . இந்த விவகாரத்தில் முசாபர்பூர் போலீசார் பாதுகாப்பு இல்லத்தின் உரிமையாளர் பிரிஜேஷ் தாகூர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யபட்டு உள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மாநில முதல்மந்திரி நிதிஷ்குமார், சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்தார். அதன்படி இந்த வழக்கை சி.பி.ஐ. நேற்று கையில் எடுத்துக் கொண்டது.
இதற்கிடையே காப்பகத்தில் சிறுமிகளுக்கு நேரிட்ட கொடூரம் தொடர்பாக அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அரசு காப்பகம் பாலியல் தொழில் செய்யப்படும் இடம்போல் செயல்பட்டு வந்துள்ளது, அங்கு கட்டாய கருக்கலைப்புக்கு அறையும் அமைக்கப்பட்டு இருந்தது என்பது தெரியவந்துள்ளது. பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அங்கேயே கருகலைப்பு செய்யப்பட்டுள்ளது. அது காப்பகமே கிடையாது, மிகவும் கொடூரமான சம்பவங்கள் நடைப்பெற்ற வீடு என்று விசாரணையில் தெரியவருகிறது.
சிறுமிகள் கொடுத்த வாக்குமூலங்கள் நினைத்து பார்க்க முடியாத கொடூரத்தை அவர்கள் சந்தித்துள்ளனர் என்பதை காட்டுகிறது.
அவர்கள் பாலியல் கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டால், அப்பட்டமாக நிர்வாணமாக்கி அவர்களுக்கு தண்டனை வழங்கபட்டு உள்ளது.
பெண்கள் அதிகாரிகளின் விசாரனையின் ஒரு பகுதியாக, பேச்சு-குறைபாடுள்ள சிறுமிகள் சைகை மொழியைப் பயன்படுத்தி, பல தகவல்களை கூறி உள்ளனர்.
நான் மாடிக்கு கொண்டு செல்லப்படுவேன் , தலைமை சார் அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் என்னை உடைகளை அகற்றி நிர்வாணபடுத்தி தண்டனை அளிப்பார் என ஒரு சிறுமி கூறி உள்ளார்.
மற்றொரு சிறுமி விசாரணையின் போது 'சார் சிறுமிகள் மீது 'ஆபாச விளையாட்டுகள்' விளையாடப் பயன்படுத்தி உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தது உள்ளனர். அந்த சிறுமி வாக்கு மூலத்தில் எங்களுக்கு போதை மருந்து கொடுக்கப்படும். சார் 2 பையன்களுடன் வருவார். நாங்கள் எதிர்போம் பையன்கள் எங்களை கீழே தள்ளுவார்கள். பின்னர் சார் எங்களை கட்டாயபடுத்துவார் என கூறி உள்ளார்.