தேசிய செய்திகள்

மைசூரு-சென்னைக்கு வாரத்தில் 3 நாட்கள் விமானம் சேவை

மைசூரு-சென்னைக்கு மேலும் ஒரு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மைசூரு,

மைசூரு மண்டகள்ளியில் உள்நாட்டு விமான நிலையம் உள்ளது. இங்கு பெங்களூரு, சென்னை, மும்மை உள்ளிட்ட இடங்களுக்கு விமானங்கள் வந்து செல்கின்றன. அதன்படி மைசூருவில் இருந்து சென்னைக்கு வாரத்தில் 4 நாட்கள் இன்டிகோ விமானம் சேவை உள்ளது.

இதற்கிடையே பயணிகள் மைசூருவில் இருந்து சென்னைக்கு கூடுதல் விமானம் இயக்கும்படி கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மைசூரு-சென்னைக்கு மேலும் ஒரு விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

வாரத்தில் 3 நாட்கள் அதாவது புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. இந்த விமான சேவையை மைசூரு மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம், விமான நிலைய அதிகாரிகள் மஞ்சள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சென்னையில் இருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டு, 11 மணிக்கு மைசூரு விமானநிலையத்திற்கு வந்தடைகிறது. பின்னர் காலை 11.30 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு மதியம் 1 மணிக்கு சென்றடைவதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்