தேசிய செய்திகள்

மணிப்பூர் முதல் மந்திரியாக பிரேன் சிங் மீண்டும் தேர்வு

இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பிரேன் சிங் சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தினத்தந்தி

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களை பாஜக கைப்பற்றியது. பஞ்சாப்பில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி அபாரமாக வெற்றிப்பெற்று முதல் முறையாக ஆட்சி அமைத்தது.

பாஜக 4 மாநிலங்களில் வெற்றி பெற்றாலும், இன்னும் எந்த மாநிலத்திலும் ஆட்சி அமைக்கவில்லை. உத்தர பிரதேச முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியானது. உத்தரகாண்ட், கோவா மாநிலத்தில் இன்னும் முதல் மந்திரி யார் என்று முடிவு செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் முதல் மந்திரியாக பிரேன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பிரேன் சிங் சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி, மாநில கவர்னர் இல. கணேசனை பிரேன் சிங் சந்திக்க உள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தின் அடுத்த முதல் மந்திரியாக யார் அறிவிக்கப்படுவார் என்ற கேள்விகள் கடந்த ஒருவாரமாக அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இன்று கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை