தேசிய செய்திகள்

தேசிய பங்கு சந்தை; 3-வது நாளாக தொடர்ந்து புதிய உச்சம்

தேசிய பங்கு சந்தை இன்று 3-வது நாளாக தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டபோதும், இந்திய பங்கு சந்தையில், வார தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

எனினும் மும்பை பங்கு சந்தையில், 2.94 புள்ளிகள் அல்லது 0.0047 சதவீதம் என்ற அளவில் சற்று சரிவு ஏற்பட்டு 62,678.90 புள்ளிகளாக உள்ளது.

ஆனால், தேசிய பங்கு சந்தை இன்று 3-வது நாளாக தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு உள்ளது. இதன்படி, நிப்டி குறியீடு 11.90 புள்ளிகள் அல்லது 0.064 சதவீதம் உயர்ந்து, 18,629.95 புள்ளிகளாக லாப நோக்குடன் உள்ளது.

வலுவான அந்நிய நேரடி முதலீடு, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து நிலையாகவும், முன்னேற்றம் அடைந்தும் காணப்படுகிறது.

தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீட்டில் ஹிண்டால்கோ, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டிஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவன பங்குகள் உச்சம் அடைந்து காணப்படுகின்றன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து