தேசிய செய்திகள்

நீட் விவகாரம்: முக்கிய குற்றவாளி பாட்னாவில் கைது

நீட் தேர்வு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகள் நடந்துள்ள விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியுள்ளது. பீகாரில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 16 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நீட் வினாத்தாள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நாலந்தாவைச் சேர்ந்த ராக்கி என்ற ராகேஷ் ரஞ்சனை, பீகார் மாநிலம் பாட்னாவில் சிபிஐ கைது செய்துள்ளது. ராக்கியின் ஐ.பி. முகவரி- மின்னஞ்சல் தரவுகளைக் கண்காணித்து அவர் பதுங்கி இருந்த இடத்தை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட ராக்கியை பாட்னாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 10 நாட்கள் சிபிஐ காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்