தேசிய செய்திகள்

டெல்லி: ஏப்ரலில் இதுவரை இல்லாத வகையில் ரூ.2,898 கோடி ஜி.எஸ்.டி. வசூல்

டெல்லியில் ஏப்ரலில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவாக ரூ.2,898 கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டதில் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டது.

அந்த சூழலில் இருந்து மெல்ல மீண்டு வருவதற்குள் 3 கொரோனா அலைகள் நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்று விட்டது.

இந்நிலையில், கடந்த 2020-21ம் நிதியாண்டின் ஏப்ரலில் டெல்லியில் ரூ.320 கோடி அளவுக்கே ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டது. இது 2021-22ம் ஆண்டு ஏப்ரலில் ரூ.2,325 ஆக இருந்தது.

ஆனால், நடப்பு 2022-23ம் நிதியாண்டில் இந்த அளவு கூடியுள்ளது. டெல்லியில் ஏப்ரலில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவாக ரூ.2,898 கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டு உள்ளது.

இதனால், பொருளாதார மீட்சி நிலை டெல்லியில் விரைவாக நடந்து வருகிறது என்பதற்கான அடையாளம் இந்த ஜி.எஸ்.டி. வசூலில் இருந்து அறியப்பட்டு உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு