தேசிய செய்திகள்

புதுச்சேரியில் விரைவில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் - கவர்னர் தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரியில் விரைவில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் கல்வியில் தரத்தை உயர்த்தவும், டிஜிட்டல் வகுப்பறை அமைத்து நவீனமாக்க தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும். புதிய கல்விக் கெள்கையில் எந்த மெழியையும் திணிக்க வழியில்லை. மெழி செல்லி தருவதை மாநிலங்கள் எடுத்துக்கெள்ளலாம்.

தாய்மெழி கல்வியைதான் புதிய கல்விக்கெள்கையில் வலியுறுத்தியுள்ளார்கள். தாய்மெழியில் பேசினாலும், தாய்மெழியில் எவ்வளவு பேர் கற்கிறார்கள்? தாய்மெழி கல்வி பின்வரிசையில்தான் உள்ளது. ஆங்கில வழிக்கல்வியைதான் பெருமையாக பேசுகிறார்கள். நோபல் பரிசு வென்ற பலரும் தாய் மெழியில் கற்றவர்கள்தான். அதனால்தான் தாய்மெழிக்குதான் முக்கியத்துவம் தருகிறோம்.

குழந்தைகளின் கிரகிப்பு தன்மை மேம்படும். வேறுமெழிக்கோ, திணிப்பு மெழிக்கோ புதிய கல்விக் கெள்கையில் முக்கியத்துவம் தரவில்லை.

புதிய கல்விக் கெள்கையை முழுவதுமாக படியுங்கள். திடீரென்று கெண்டு வரவில்லை. பல நன்மைகள் இருக்கிறது. இடைநிற்றல் இருக்காது. குழந்தைகளை வகுப்பறை தாண்டி உலக அரங்கில் உயர்ந்தவர்களாக மாற்றவேதான் இம்முறை அமலாகிறது.

தற்காப்புக் கலையை அனைத்து பள்ளிகளிலும் செல்லித்தர வேண்டும். புதுச்சேரியிலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். அதேபோல் குழந்தைகளுக்கும் கவுன்சிலிங் தர ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும்.

தமிழக பாடத்திட்டத்தோடு புதுச்சேரி, காரைக்கால் இணைந்துள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் கெண்டு வர முயற்சித்து வருகிறோம். கல்வி வாரியம் தெடர்பாக கெள்கை முடிவு எடுக்கவேண்டும்.

புதிய கல்விக் கெள்கை புதுச்சேரியில் நிச்சயமாக அமல்படுத்தப்படும். முதலிலேயே எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்திப்போம். வருங்காலம் சவாலான காலம். உலகரங்களில் போட்டியிட வேண்டும். சவால்களை சந்திக்க குழந்தைகளை தயார் செய்யவே புதிய கல்விக்கெள்கை. அட்சயபாத்திரா திட்டத்தில் தரப்படும் மதிய உணவு தெடர்பாக கருத்துகள் கேட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை