தேசிய செய்திகள்

பஞ்சாப் மாநிலத்தில் புதுமண தம்பதி சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலத்தில் புதுமண தம்பதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நவ்ஷேரா தல்லா என்ற கிராமத்தைச் சேர்ந்த அமன்பிரீத் கவுர் (வயது 23) என்ற இளம்பெண் தனது குடும்பத்தினரின் விருப்பத்துக்கு மாறாக, அதே ஊரைச் சேர்ந்த அமன்தீப் சிங் (24) என்பவரை 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், புதுமண தம்பதியர் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அமன்பிரீத் கவுரின் உறவினர்கள் சிலர் அவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் கணவன்-மனைவி இருவரும் பலி ஆனார்கள்.

இது தொடர்பாக அமன்பிரீத் கவுரின் குடும்பத்தினர் 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாகவும், இது கவுரவ கொலையாக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை