தேசிய செய்திகள்

இரும்பு கழிவுப் பொருள் விற்பனை மூலம் ரெயில்வேக்கு ரூ.2500 கோடி வருமானம்

2022-23-ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் கழிவுப் பொருட்கள் விற்பனையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்திய ரயில்வே ரூ.2500 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது

தினத்தந்தி

நாடு முழுவதும் ரெயில் பாதை கட்டுமானப் பணிகளின் போது உருவாகும் இரும்புக் கழிவுகள் மற்றும் ரெயில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள மீண்டும் பயன்படுத்த முடியாத வார்ப்பு இரும்பு ஸ்லீப்பர்கள் ரெயில்வே விதிகளின்படி அகற்றப்படுகின்றன. இந்த இரும்புக் கழிவுகளை தொடர் நடவடிக்கை மூலம் ரெயில்வே விற்பனை செய்து வருகிறது. மின்னணுமுறை ஏலம் மூலம் இந்த கழிவுப் பொருட்கள் விற்பனை செய்யப் படுகின்றன. இந்த செயல்முறை மண்டல ரெயில்வே மற்றும் ரெயில்வே வாரியம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில் 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் கழிவுப் பொருட்கள் விற்பனையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்திய ரயில்வே ரூ.2500 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. 2021-22 நிதியாண்டின் இதே கால கட்டத்தில் ரூ.2300 கோடி கழிவு பொருள் ஏலம் மூலம் வருவாய் ஈட்டப்பட்டது. அதை ஒப்பிடும்போது நடப்பாண்டு 28.91 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ரெயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு