Image Courtesy: PTI   
தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி

இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் மற்றொரு நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. புதுடெல்லியில் குரங்க அம்மையால் பாதிக்கப்பட்ட 30 வயதுடைய நைஜீரிய பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் குரங்கு அம்மையின் 14வது வழக்கு இதுவாகும். இதனை அடுத்து, இப்போது டெல்லி நகரில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இதே மாநில அரசு மருத்துவமனையில் மேலும் ஒருவர் குரங்கு காய்ச்சல் அறிகுறிகளோடு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் பரிசோதனை முடிவுகள் தற்போது வரை வரவில்லை. கடந்த 17 ஆம் தேதி டெல்லியில் வசிக்கும் மற்றொரு 30 வயது நைஜீரியப் பெண்ணுக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்