தேசிய செய்திகள்

ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் பலி

ஒடிசாவில் கனமழை பெய்தது

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலத்தில் நேற்று பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அம்மாநிலத்தின் கோரபுட், ஜஜ்பூர், கஞ்சம், தன்கனல், கஜபதி போன்ற மாவட்டங்கள் கனமழை பெய்தது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையின் போது வயலில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் , மழைக்கு மரம் அருகே ஒதுங்கி நின்றவர்கள் என 6 பெண்கள் உள்பட 9 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.