தேசிய செய்திகள்

புதுச்சேரியில் நிபா வைரஸ் இல்லை: சுகாதாரத்துறை தகவல்

புதுச்சேரி ஜிப்மரில் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று புதுவை சுகாதாரத்துறை தெரிவி

தினத்தந்தி

புதுச்சேரி,

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, அம்மாநில சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது என்றும் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை புதுச்சேரி சுகாதாரத்துறை மறுத்துள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று புதுவை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நிபா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு இருந்த நபருக்கு அனைத்து பரிசோதனைகளும் நெகட்டிவாக வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்