தேசிய செய்திகள்

பொருளாதாரத்தை சீரமைக்க நிதி மந்திரியின் அறிவிப்பு அழகுபடுத்தும் ஒப்பனைதான் - காங்கிரஸ் தாக்கு

பொருளாதாரத்தை சீரமைக்க நிதி மந்திரியின் அறிவிப்பு அழகுபடுத்தும் ஒப்பனைதான் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பொருளாதார மந்தநிலையை சீரமைக்க நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்த புதிய திட்டங்கள் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது:-

பொருளாதார சிக்கலை எப்படி சமாளிப்பது என்பது பற்றி நிதி மந்திரிக்கு எதுவும் தெரியவில்லை. பொருளாதாரத்தை ஊக்குவிக்க ஏற்கனவே அறிவித்த திட்டங்கள் நிலைமையை மேலும் மோசமடையச் செய்தது. சமீபத்திய அறிவிப்புகளும் உதவப்போவதில்லை. இந்திய நிதி மந்திரிக்கு சிறிதளவுகூட புரிதல் இல்லை.

பொருளாதாரத்தை சீரமைக்க ஒரு முழுமையான திட்டங்களின் தொகுப்பு தேவைப்படுகிறது. இன்றைய அறிவிப்புகள் எதுவும் இந்திய பொருளாதாரத்தை சீரமைக்காது. அவை ஒரு அழகுபடுத்தும் ஒப்பனை மட்டுமே. சிறிய அளவிலான இந்த அறிவிப்பு அரசின் கர்வமான போக்கையும், நிலைமையின் தீவிரத்தன்மையை அலட்சியம் செய்வதையுமே காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து