பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள் ளது. இந்த கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதாத ளம் தலைவர் நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக உள்ளார். மாநிலத்தில் நீண்ட காலம் முதல்-மந்திரியாக இருந்த பெருமைக்கு சொந்தக்காரரான நிதிஷ்குமார் சமீபத்தில்தான் 75 வயதை நிறைவு செய் தார்.
மாநிலத்தில் 10-வது முறையாக கடந்த நவம்பர் மாதம்தான் முதல்-மந்தி ரியாக நிதிஷ்குமார் பதவியேற்ற நிலையில், தனது முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பீகாரில் அமையும் புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்: வழிகாட்டுதல் இருக்கும் என்று நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். நிதிஷ் குமார் பதவி விலக எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிதிஷ்குமாருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.