புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இந்திய அணு ஆயுத கொள்கை பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய வெளியுறவு விவகாரத்துறை மந்திரி முரளீதரன் பதிலளித்து பேசியதாவது:-
எதிரி நாடுகள் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் முன்பு அணு ஆயுத தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்தியாவின் இந்த அணு ஆயுத கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அவர் கூறினார்.