தேசிய செய்திகள்

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்துவதில் தவறில்லை - நிதிஷ் குமார்

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் தவறில்லை என பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பாட்னா,

காங்கிரஸ் கட்சி வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் தவறில்லை என பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான கமல்நாத், வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் முகமாக ராகுல் காந்தி திகழ்வார். பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே அனைத்து எதிர்க்கட்சிகளாலும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். என தெரிவித்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் தவறில்லை என பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்த காங்கிரஸ் முயல்கிறது. இதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஏனெனில், நான் ஏற்கனவே பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என தெரிவித்துவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்