தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் உரிய விவாதங்கள் இல்லை - சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வருத்தம்

போதுமான விவாதங்கள் நடைபெறாததால் சட்டத்தின் நோக்கங்களை புரிந்து கொள்ள முடியவில்லை என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவில் பேசிய தலைமை நீதிபதி என்.வி ரமணா, நாடாளுமன்றத்தில் உரிய விவாதங்கள் இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். நீதிபதி என்.வி ரமணா மேலும் கூறுகையில்,

போதுமான விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதால் அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. போதுமான விவாதங்கள் நடைபெறாததால் சட்டத்தின் நோக்கங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.

விவாதங்கள் இன்றி புதிய சட்டங்களை இயற்றுவது வருத்தமளிக்கிறது. சட்டங்களில் எந்த தெளிவும் இல்லை. சட்டத்தின் நோக்கம் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. பொதுமக்களுக்கு இதுவும் கூட இழப்புதான். சட்டம் இயற்றுதலில் நிறைய இடைவெளியையும் தெளிவின்மையையும் காண முடிகிறது என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்