தேசிய செய்திகள்

இலவச அரிசி, கோதுமையை மேலும் 8 மாதம் நீட்டிக்க வேண்டும்: மோடிக்கு நவீன் பட்நாயக் கடிதம்

கொரோனா கால உதவியாக இலவச அரிசி, கோதுமையை மேலும் 8 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார்.

புவனேஸ்வர்,

கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவும்வகையில், பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டப்படி, 80 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் இலவச அரிசி அல்லது கோதுமை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. வழக்கமாக பெறும் மானிய விலை உணவு தானியத்துடன், கூடுதலாக தலா 5 கிலா அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டது. அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்த இந்த இலவச உணவு தானிய வினியோகம், இம்மாதத்துடன் முடிவடைகிறது.

இந்தநிலையில், பிரதமர் மோடிக்கு ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா முற்றிலும் ஒழியவில்லை. கொரோனா காலத்துக்கு முந்தைய நிலையை பொருளாதார நடவடிக்கைகள் இன்னும் எட்டவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள். கொரோனா காலத்தில் அனைவருக்கும் உணவு கிடைப்பதை இத்திட்டம்தான் உறுதி செய்தது. ஆகவே, இலவச உணவு தானியம் வழங்குவதை மேலும் 8 மாதங்களுக்காவது நீட்டிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்