தேசிய செய்திகள்

ஒடிசா: லஞ்ச வழக்கில் சிக்கிய பெண் வருவாய் ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கில் பெண் வருவாய் ஆய்வாளருக்கு தற்போது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில் உள்ள ஹிண்டோல் பகுதியில், மாலதி தேஹுரி என்ற பெண், வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு நிலப் பட்டா மாற்றம் தொடர்பான நடைமுறையை மேற்கொள்வதற்காக லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் மாலதி பிடிபட்டார்.

இதையடுத்து மாலதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகளை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில், மாலதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.