தேசிய செய்திகள்

ஒடிசா: அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ. 77 லட்சம் மோசடி... வியாபாரி கைது

ஒடிசாவை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.77.26 லட்சத்தை மோசடி செய்த வியாபாரி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பிடடாலி அரிசி ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் ஆந்திர பிரதேச கிரிசோலா பகுதியை சேர்ந்த வியாபாரி வர்மா அரிசி வாங்கி வந்தார்.

இந்த ஆலையில் பலமுறை அரிசி வாங்கி விட்டு இவரும் இவரது கூட்டாலிம் பணத்தை உடனடியாக கொடுத்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் பின்பு பணம் தருகிறோம் என கூறி ரூ. 77.26 லட்சம் மதிப்பிளான அரிசியை வாங்கியுள்ளனர்.

திருப்பி பணம் செலுத்துவதாக கூறிய இருவரும் பணத்தை செலுத்தவே இல்லை. பணத்தை கொடுத்து பல நாட்களாகி சில ஆண்டுகளையும் கடந்தது. இதனால் ரூ.77.26 லட்சததை ஏமாற்றிய வியாபாரிகள் மீது கோலந்தாரா போலீசில் ஆலை உரிமையாளர் புகார் அளித்தார்.

இந்த நிலையில் புகாரின் பேரில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் மோசடி செய்த வர்மாவை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது நபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து