தேசிய செய்திகள்

இடஒதுக்கீடு முறையை அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் மாயாவதி வலியுறுத்தல்

எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது கட்டாயம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தது.

லக்னோ,

இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காங்கிரசைத் தொடர்ந்து, தற்போதைய பா.ஜனதா அரசும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரை புறக்கணித்து வருகிறது. மத்திய அரசின் இரக்கமற்ற அணுகுமுறையால்தான் இடஒதுக்கீடு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது பெரிதும் துரதிருஷ்டவசமான நிகழ்வாகும். ஆகவே, இடஒதுக்கீடு முறையை அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும். அப்போதுதான், மேற்கண்ட சமூகத்தினரின் இடஒதுக்கீடு உரிமை பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்