தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 961 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 961 ஆக உயர்வடைந்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. எனினும், புதிய வகை ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 781 ஆக இருந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 961 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது. இதேபோன்று, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 13,154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

நாட்டில், டெல்லி 263, மராட்டியம் 252, குஜராத் 97 ஆகியவை அதிக ஒமைக்ரான் பாதிப்புகளை கொண்டுள்ளன. இதனை தொடர்ந்து, ராஜஸ்தான் 69, கேரளா 65, தெலுங்கானா 62 ஆகியவை உள்ளன. தமிழகம் 7வது இடத்தில் உள்ளது. இதுவரை 45 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதுவரை மொத்தம் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை