தேசிய செய்திகள்

மன்மோகன் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்- ப.சிதம்பரம்

மன்மோகன் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 88-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மன்மோகன் சிங் பிறந்த நாளான இன்று, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

ப.சிதம்பரம் டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:- மன்மோகன் சிங்கின் பிறந்த நாள் இன்று. மொத்த நாடும் அவரின் வாழ்வு மற்றும் சேவைக்காக பெருமைப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு இளைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி. பொதுவாழ்வில் உள்ள ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றால் மன்மோகன் சிங் சந்தேகமில்லாமல் அதனைப் பெறத் தகுதியானவர் என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு