கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

'வெள்ளையனே வெளியேறு' இயக்க நினைவு தினம்: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவு தினத்தையொட்டி எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சுதந்திர போராட்ட காலத்தில் தொடங்கப்பட்ட இயக்கமான வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக குறை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு அஞ்சலி. இந்தியாவை காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கு காந்திஜியின் தலைமையில் இந்த பெரும் பங்காற்றியது' என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அவர், 'இன்றும் இந்தியா, ஊழலே வெளியேறு, குடும்ப அரசியலே வெளியேறு, திருப்திபடுத்தும் அரசியலே வெளியேறு என ஒரே குரலாய் ஒலிக்கிறது' என்றும் எதிர்க்கட்சிகளை மறைமுகமாக கூறியிருந்தார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்