தேசிய செய்திகள்

புதிய இந்தியாவில் ஒரே ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு மட்டுமே இடம் உள்ளது: ராகுல் காந்தி

புதிய இந்தியாவில் ஒரே ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு மட்டுமே இடமுள்ளது; அது ஆர்எஸ்எஸ் அமைப்பு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். #RahulGandhi

புதுடெல்லி,

மகாராஷ்டிர மாநிலம், பீமா-கோரேகான் கிராமத்தில் கடந்த ஆண்டு தலித்துகளுக்கும், பேஷ்வா; சமூகத்தினரும் இடையே நிகழ்ந்த கலவரம் தொடர்பாக இடதுசாரி சிந்தனையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என 5 பேரை மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில், மத்திய அரசை விமர்சித்து, ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: புதிய இந்தியாவில் ஒரே ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு மட்டுமே இடமுள்ளது. அது, ஆர்எஸ்எஸ் அமைப்பு. இதர அனைத்து தொண்டு நிறுவனங்களையும் இழுத்து மூடி விடுங்கள். அனைத்து சமூக செயல்பாட்டாளர்களையும் சிறையில் தள்ளிவிடுங்கள். எதிர்ப்பு தெரிவித்தால் சுட்டுவிடுங்கள். இதுதான் புதிய இந்தியா என்று பதிவிட்டுள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்