தேசிய செய்திகள்

ஹத்ராஸ் செல்ல ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் 5 பேர் மட்டுமே செல்ல போலீஸ் அனுமதி

ஹத்ராஸ் செல்ல ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் 5 பேர் மட்டுமே செல்ல போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி தலைமையில் எம்பிக்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சி குழுவினர் ஹத்ராஸ்க்கு புறப்பட்டனர். ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி காரிலும் ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் பேருந்திலும் சென்றனர்.

ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸாரை தடுத்து நிறுத்த நொய்டாவில் சாலை மூடப்பட்டது. ராகுல்காந்தி வருகையையொட்டி போலீசார் குவிக்கப்பட்டனர். ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பதை, உலகில் எதுவும் தடுக்க முடியாது என ராகுல்காந்தி கூறியிருந்தார்.

இந்நிலையில் ஹத்ராஸ் செல்ல ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் 5 பேர் மட்டுமே செல்ல போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை