தேசிய செய்திகள்

தமிழ்நாட்டில் அமையவுள்ள புதிய ரெயில் பாதை திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு

நடப்பாண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் அமையவுள்ள புதிய ரெயில் பாதை திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

கடந்த பிப்.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நித்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் ரெயில்வே துறைக்கு மொத்தம் ரூ.1.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், தெற்கு ரெயில்வேக்காக ரூ. 7,114 கோடி ஒதுக்கப்பட்டது.

அகல பாதை திட்டங்களுக்காக ரூ.346.80 கோடி, சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலம் அமைக்க ரூ. 464 கோடி, இரட்டை ரெயில் பாதை திட்டங்களுக்கு ரூ. 381.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தண்டவாளங்களை புதுபிக்க ரூ. 1,470 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தென்னிந்தியாவின் 11 புதிய ரயில் பாதைகளை அமைக்கும் திட்டத்திற்கும் இதில் இடமளிக்கப்பட்டிருக்கிறது. இதில், கேரளாவில் திருநின்னவாயா குருவாயூர் (35 கி.மீ), அங்கமாலி சபரிமலா (116 கி.மீ) ஆகிய இரண்டு திட்டங்களும் அடங்கும்

தமிழ்நாட்டில் திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை (70 கி.மீ), திண்டிவனம்-நகரி (179.2 கி.மீ), அத்திப்பட்டு-புத்தூர் 88.30 (கி.மீ), ஈரோடு-பழனி (91.05 கி.மீ), சென்னையிலிருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர் (179.28 கி.மீ), மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி (143.5 கி.மீ), ஸ்ரீபெரும்புதூர் -கூடுவாஞ்சேரி (60 கி.மீ), மொரப்பூர்-தருமபுரி (36 கி.மீ) என மொத்தம் 10 புதிய வழிதடங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

11வது திட்டமாக ராமேஷ்வரம் தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இந்த ராமேஷ்வரம் தனுஷ்கோடி திட்டத்திற்கு மட்டும் ரூ. 59 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, மேற்குறிப்பிட்ட 10 புதிய ரெயில் பாதை திட்டத்திற்கு தலா ரூ.1,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்