தேசிய செய்திகள்

இஸ்ரேலில் இருந்து 286 இந்திய பயணிகளுடன் ஐந்தாவது விமானம் டெல்லி வந்தது

இஸ்ரேலில் இருந்து 286 இந்திய பயணிகள் மற்றும் 18 நேபாள குடிமக்களுடன் ஐந்தாவது விமானம் டெல்லி வந்தது

புதுடெல்லி,

இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று 9ம் நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரால் இஸ்ரேலில் பல இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது. இதனிடையே, இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி, நான்கு கட்டங்களாக இஸ்ரேலில் இருந்து இந்தியர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து 286 இந்திய பயணிகள் மற்றும் 18 நேபாள நாட்டு மக்களுடன் ஐந்தாவது விமானம் இந்தியாவுக்கு வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய மந்திரி எல்.முருகன் வரவேற்றார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...