தேசிய செய்திகள்

ஆபரேசன் கங்கா; ருமேனியாவில் இருந்து 7வது விமானம் இந்தியா வந்தடைந்தது

ருமேனியாவின் புக்காரெஸ்டில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு இந்திய குடிமக்கள் 182 பேருடன் 7வது விமானம் வந்தடைந்தது. இந்திய மாணவர்களை மத்திய மந்திரி நாராயண் ரானே வரவேற்றார்.

மும்பை,

ரஷிய போரால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.

ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடந்து வரும் இந்த பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இது தொடர்பாக அடுத்தடுத்து உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்.

மத்திய அரசின் அயராத நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.

இதில் நேற்று காலையில் 249 மாணவர்களுடன் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 5-வது விமானம் டெல்லி வந்து சேர்ந்தது. இதில் பெரும்பாலும் மாணவர்களே அடங்கியிருந்தனர். தொடர்ந்து ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்களுடன் 6-வது விமானம் மாலை சுமார் 6 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது.

இதேபோன்று, ருமேனியாவின் புகாரெஸ்டில் இருந்து 7வது விமானம் 182 இந்தியர்களுடன் மும்பைக்கு புறப்பட்டது. எட்டாவது ஆபரேஷன் கங்கா விமானம் புதாபெஸ்டில் இருந்து புதுடெல்லிக்கு 216 இந்தியர்களுடன் புறப்பட்டது.

நம்முடைய மீதமுள்ள இந்திய குடிமக்களை பாதுகாப்புடன் அழைத்து வரும்வரை பணிகள் தொடரும் என்று மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில், ருமேனியாவின் புக்காரெஸ்டில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு இந்திய குடிமக்கள் 182 பேரை ஏற்றி கொண்டு 7வது விமானம் வந்தடைந்தது. இந்திய மாணவர்களை மத்திய மந்திரி நாராயண் ரானே வரவேற்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு