தேசிய செய்திகள்

படகோட்டிகளை சந்திக்கும் வாய்ப்பு: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

ஹூக்ளி நதியில் படகோட்டிகளின் கடின உழைப்பு போற்றத்தக்கது என பிரதமர் மோடி கூறினார்.

கொல்கட்டா,

தேர்தல் பிரசாரத்திற்காக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அவர் ஹூக்ளி நதியில் படகில் பயணம் செய்தார். படகோட்டியை கட்டியணைத்து ரூ.1000 கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஹூக்ளி பயணம் குறித்து நெகிழ்ச்சியான பதிவை பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

இன்று காலை கொல்கட்டாவில் ஹூக்ளி நதிக்கரையில் சிறிது நேரம் செலவிட்டேன். இது அன்னை கங்கைக்கு நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது.

படகோட்டிகளைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களின் கடின உழைப்பு போற்றத்தக்கது. காலை நடைப்பயிற்சி செய்பவர்களையும் சந்தித்தேன். ஹூக்ளி நதிக்கரையில் உண்மையிலேயே ஒரு மிகச் சிறப்பான காலைப் பொழுது அமைந்தது.

இந்த மாபெரும் நதியைப் புகைப்படம் எடுக்க முயன்றேன். வித்யாசாகர் சேது மற்றும் ஹவுரா பாலத்தையும் அருகில் கண்டேன். ஒவ்வொரு மேற்குவங்க மாநில மக்கள் மனதிலும் கங்கை ஒரு மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. தெய்வீக நீர் ஒரு முழு நாகரிகத்தின், காலத்தால் அழியாத ஆன்மாவைத் தாங்கிச் செல்கிறது என அதில் பதிவிட்டுள்ளார்.