தேசிய செய்திகள்

சட்ட விதிமுறைகளை மறுஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

‘லாக்-அப்’ மரணம், பாலியல் கொடுமை வழக்குகளில், சட்ட விதிமுறைகளை மறுஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் டெல்லியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில், லாக்-அப் மரணம், சித்ரவதை, கைதிகள் மீது பாலியல் வன்கொடுமை போன்ற அத்துமீறல்கள் இந்தியாவில் வழக்கமான சம்பவங்களாகி உள்ளன. எனவே சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு கோர்ட்டு மேற்பார்வையில் பிரத்யேகமாக ஒரு குழுவை அமைத்து தற்போது இந்தியாவில் லாக்-அப் மரணங்கள், சித்ரவதை, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்ட விதிமுறைகள் குறித்து மறுஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவில் சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையின்போது தந்தை-மகன் இறந்தது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு