தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் பாரம்பரிய கல் எறியும் திருவிழா- 400க்கும் மேற்பட்டோர் காயம்

மத்திய பிரதேசத்தில் காட்மர் என்ற பாரம்பரிய கல் எறியும் திருவிழாவில் பங்கேற்றவர்களில் 400 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சிந்த்வாரா,

மத்திய பிரதேசத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த காட்மர் என்ற பாரம்பரிய திருவிழா வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். ஜாம் ஆற்றின் இரு கரைகளிலும் சாவர்காவன் மற்றும் பந்துர்னா நகர மக்கள் குவிந்து இருப்பர். ஆற்றின் நடுவில் காய்ந்த மரத்தின் உச்சியில் கொடி ஒன்று ஏற்றப்பட்டிருக்கும்.

இரு புறமும் உள்ள மக்கள் கற்களை மறுபுறம் நோக்கி வீசி கொண்டே ஆற்றின் நடுவே சென்று கொடியை கைப்பற்ற வேண்டும். இந்த சம்பவத்தில் 400-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இரண்டு பேர் பலத்த காயத்துடன் சிகிச்சையில் உள்ளனர். கல் எறியும் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசர் குவிக்கப்பட்டனர். மருத்துவ சிகிச்சைக் குழுவும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு