தேசிய செய்திகள்

கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 81 ஆயிரம் துணை ராணுவப்படையினர் விருப்ப ஓய்வு; 16 ஆயிரம் வீரர்கள் ராஜினாமா

கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 81 ஆயிரம் துணை ராணுவப்படையினர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். சுமார் 16 ஆயிரம் பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

விருப்ப ஓய்வு

சி.ஆர்.பி.எப்., எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ், சாஷஸ்ட்ரா சீமா பால், மத்திய தொழிலக பாதுகாப்பு படை, அசாம் ரைபிள்ஸ் ஆகிய 6 துணை ராணுவப்படைகளில் மொத்தம் 10 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.இந்த படைகளில் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டுவரை 81 ஆயிரத்து 7 பேர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக, எல்லை பாதுகாப்பு படையில் மட்டும் 36 ஆயிரத்து 768 பேர் விலகி உள்ளனர்.கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்.மேலும், இதே காலகட்டத்தில்,

துணை ராணுவப்படையை சேர்ந்த 15 ஆயிரத்து 904 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

காரணங்கள் என்ன?

விருப்ப ஓய்வு, ராஜினாமா ஆகியவற்றுக்கான காரணங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசேஷ ஆய்வு எதுவும் நடத்தவில்லை. இருப்பினும், தனிப்பட்ட மற்றும் குடும்ப பிரச்சினைகள், உடல்நலக்குறைவு, வேறு சிறந்த பணிவாய்ப்பு ஆகியவைதான் முக்கியமான காரணங்கள் என்று துணை ராணுவப்படையினரே நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு