தேசிய செய்திகள்

ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க 5 நாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி

ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க 5 நாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க 5 நாடுகளில் இருந்து 5 ஆயிரத்து 805 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ள உள்துறை அமைச்சக கூடுதல் செயலர், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பிரான்ஸ், சிங்கப்பூர், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து திரவ மருத்துவ ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ஒருலட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் விநியோகத்தை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தற்போது ஆயிரத்து 619 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் இதற்கான பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்