தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜம்மு,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அத்துமீறி செயல்படுவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய செயல்பாடு அதிகரித்துள்ளது. நேற்று எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கிருஷ்ணகாதி செக்டாரில் உள்ள நிலைகளை குறிவைத்து காலை 7.45 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

முன்னதாக நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்தியிருந்த தாக்குதலில் ராணுவ வீரர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயம் அடைந்தனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிகழாண்டு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி செயல்பட்டு வருகிறது. இந்திய பிராந்திய பகுதிகளில் நடப்பாண்டு 600 க்கும் மேற்பட்ட முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு