தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்திய ராணுவ அதிகாரி வீரமரணம்; 2 வீரர்கள் காயம்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர், கிர்னி மற்றும் தேக்வார் ஆகிய பிரிவுகளில் இன்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்களை கொண்டு இந்தியாவை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், அதனை மீறும் வகையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு உள்ளது. எனினும் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலுக்கு உடனடியாக இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், வட காஷ்மீரின் நவ்காம் பிரிவில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். 2 வீரர்கள் காயமடைந்து உள்ளனர் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்