தேசிய செய்திகள்

ராஜோரி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல், இந்திய ராணுவம் பதிலடி

ராஜோரி செக்டாரில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா சரியான பதிலடியை கொடுத்தது.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவமும் சரியான பதிலடியை கொடுத்தது. மாலை 5:30 மணியளவில் தொடங்கிய துப்பாக்கி சண்டை 6:20 வரையில் நீடித்தது என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் நவம்பர் மாதம் 29 மற்றும் 28 தேதிகளில் சுந்தர்பானி மற்றும் பூஞ்ச் செக்டாரில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. முன்னதாக 15 முதல் 17-ம் தேதி வரையில் ஜம்மு மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் எல்லைப்பகுதியில் அத்துமீறிய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்