தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

ஜம்மு,

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காதி பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டுவீசி தாக்கியதில், எல்லை பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சத்யபால் சிங் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு ராஜோரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு